பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மட்டுமா? நல்ல பெண்டிர் முரட்டுத்தனத்திற்கு - வன் கண்மைக்கு மாற்று மருந்து!

தலைவனின் வாழ்க்கைத் துணையாய் அமைந்து அவனுடைய முரட்டுத் தனங்களையெல்லாம் அன்பியலால் மாற்றியமைத்து அவனைத் தெய்வமாக்குபவள் பெண் ! அத்தகைய பெண்டிர் மதுரையில் இருந்திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டான் என்பது கண்ணகியின் துணிபு.

ஆம், உண்மைதான்! பெண், சமுதாயத்தில் பாதி! பெண், வாழ்க்கையில் பாதியல்லள். பெண், வாழ்க்கை முழுதும் தாயாக, உடன் பிறந்தவளாக, மனைவியாக, தோழியாகத் தொடர்ந்து வருகிறாள்! திருவள்ளுவர் காட்டும் பெண், வாழ்க்கைக்குத் துணை நாடுபவள் அல்லள்; துணையாய் அமைபவள்; துணை நலமாக அமைந்து ஆக்கம் தருபவள்.

பெண்டிர்குலம் தரமானதாக அமைந்தால் தனி உடைமைத் தீமைகள் வளரா, கூட்டுக் குடும்பங்கள் நிலவும்; நாட்டில் களவு நிகழாது; கொலை நிகழாது.

பெண்டிர் குலம் ஆக்கத்தினைத் தரும் குலம்! இன்ப அமைதி காக்கும் குலம்! இன்றும் நமது நாடு துன்பங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. பெண்டிர் இல்லையா? இருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தமிழ்ப் பெண்களாக இல்லை. தனி உடைமைப்பற்று, குடும்பப்பாசம் (அன்பு விலக்கல்ல) ஆகிய நச்சுக் குணங்களை எய்தியுள்ளனர். இன்றைய பெண்டிர்களில் பலருக்குப் பொதுமைக் குணம் இல்லை. நாடே வீடு ஆனால்கூட அவர்கள் மனநிறைவு பெறாத நிலை! இந்த நிலை மாற வேண்டும்.

படித்த பெண்கள் இன்று மிகுந்துள்ளனர். இவர்கள் திண்மையுடையவர்களாக விளங்கிப் பெண்மைக்குச் சிறப்புச்