பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

125



ஆயினும் கண்ணகியை மிகுதியும் வருத்திய துன்பம் கோவலன் கொலையுண்டதன்று. கோவலனைக் கொலை செய்ய சொல்லப்பட்ட காரணத்தில் தான்! அதாவது ‘கள்வன்’ என்ற குற்றச்சாட்டின் மீது கொல்லப் பெற்றதுதான்!

கள்வர்கள், மற்றவர்களைக் கள்வராக்கிக் கொள்ளும் முறை அன்றும் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது. இது நெறிமுறை பிறழ்ந்த நிலை. களவு, பொய்ம்மை, ஆராயாமை, அறியாமை, கொலை ஆகிய பல குற்றங்கள் கோவலன் கொலையின் மூலம் தெரிய வருகின்றன.

இத்தகு குற்றங்கள் தெய்வ நம்பிக்கையுடையவர் களிடத்தில் இருப்பதற்கில்லை; தெய்வம் உள்ள இடத்தில் இருக்காது; பழிசுமந்த கொலைகள் இருத்தற்கில்லை. இது இளங்கோவடிகள் நம்பிக்கை கண்ணகியின் நம்பிக்கை! ஆனால், மதுரையின் நடப்பு முரண்பாடாக இருந்தது.

ஆதலால் “தெய்வமும் உண்டு கொல்” என்று கேட்கிறாள் கண்ணகி. இன்றும் “தெய்வமும் உண்டு கொல்!” என்று கேட்கத்தான் செய்கின்றனர் பலர், “தெய்வம் கோயிலில் இருக்கிறது” என்று கூறுகின்றனர்! தெய்வத்தை ஒருமையில் காண்மின்! வாழ்விக்கும் பேரறத்தில் காட்டு மின்! இதுவே கண்ணகியின் வினாவிற்கு விடை!

நன்றே செய்க! இன்றே செய்க!

உயிர் வாழ்க்கை என்பது, குறிக்கோளுடையது. உயிர் கண்டறிவதில்லை; ஆனால் கேட்டறியும், உயிரின் தரமும் தகுதியுமே உலகியலின் வரலாறாக வளர்கிறது.

உயிர், நல்லியல்புடையது. ஆனால் சார்பினால் உயிரின் நல்லியல்பு திரிகிறது. உயிர் தம்மியல்பில் திரியாமல் தம்நிலையில் நன்னிலையைப் பாதுகாக்க அறம் செய்து கொண்டிருக்க வேண்டும். அறம் என்பது மனத்தூய்மை,