இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
336
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உண்மையைத் தேடும் உணர்வு தலைகாட்டிய உடனேயே அந்த உண்மையும் நம்மை நோக்கி நகர்ந்து வரும்; நம் முன் வந்து நிற்கும். அப்போது உண்மையைக் காணமுடியும்; அனுபவிக்க முடியும் நான் எனது என்ற கொடுமையிலிருந்து விடுதலைப் பெற்றவர்கள் உண்மையை உணர முடியும்; காண முடியும்; அனுபவிக்க முடியும். அந்த உண்மையே நாம் தேறுதற் பொருட்டு அயோத்தியிலும் வந்து நின்றது.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே
மறைகளுக்கு இறுதி ஆவார்!
- கம்பன்