பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!


சேர்ந்த என் நண்பர்களெல்லாம் கூடி 'மோகினி பிக்சர்ஸ்' என்ற பெயரில் ஒரு திரைப்படக் கம்பெனியைத் துவக்கிக் 'கவிகாளமேகம்' என்ற படத்தை எடுத்தோம். அக் கம்பெனியில் கீழ்க்கண்டவர்கள் பங்குதாரர்கள்.


1) திருவாளர் டி. கிருஷ்ணமூர்த்தி (நீதிக்கட்சிப் பிரமுகர், சேலம் மாவட்டக் கழகத் தலைவர்)


2) திருவாளர். கனகசபாபதி உடையார்


3) திருவாளர் கி. ஆ.பெ. விசுவநாதம்


4) திருவாளர் டி.என்.ராமன்


5) நான்


நடிகர்கள்:

1) திரு. என். எஸ். கிருஷ்ணன்


2) திரு. திருவாவடுதுறை ராஜரத்தனம் (குழலிசை வேந்தர்)


3) திரு காளி என். ரத்தனம்


4) திரு சி.வி.வி. பந்துலு


5) திருமதி டி.ஏ. மதுரம்


6) திருமதி எஸ். பி. எல். தனலட்சுமி


7) திருமதி பி. எஸ். ஞானம்


8) திருமதி பி. ஆர். மங்களம்


கதை வசனம் பாட்டு பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குத் துணையாகச் 'சினிமா உலகம்’ பத்திரிகை ஆசிரியர் பி. எஸ் செட்டியாரும், ஜலகண்டாபுரம் ப. கண்ணனும் இருந்தனர். எல்லிஸ் ஆர். டங்கன், மொய்லன் ஆகிய இருவரும் படத்தின் இயக்குநர்கள். திருவாரூர் இசைக் கல்லூரியில் பணியாற்றிய டி.வி. நமசிவாயம் (டி.என். ராமனின் தங்கை மகன்) இசையமைப்பாளர்.


மோகினி பிக்சர்ஸ் அலுவலகம் முதலில் சேலம் சந்திப்பில் (சூரமங்கலம்) இருந்தது; பின்னர் சென்னைக்கு மாறியது. சென்னையில் பொறிஞர் பா.வே. மாணிக்க