பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/57

சொன்னதில் என்ன தவறு? வேண்டுமானால் பாவேந் தரையே கேளுங்கள்!' என்று கூறினார்.

அடுத்த கட்டிடத்தில் எழுதிக்கொண்டிருந்த பாவேந்தர் செட்டுக்கு அழைக்கப்பட்டார். நாயுடுவின் குற்றச் சாட்டைப்பற்றி அவரிடம் கூறிய போது அவர் சிறிதும் கோபப்படவில்லை. "ஆமய்யா! ஆமய்யா!" என்று அன்போடு கூறியதோடு நாயுடுவையும் பாராட்டினார். பிறகு அளகாபுரி அமராபதி என்று திருத்தப்பட்டது.

இதேபோலச் சுபத்ரா படப்பிடிப்பிலும்ஒருநிகழ்ச்சி நடை பெற்றது. சுபத்ராவின் திருமணத்துக்கு வேண்டிய ஏற் பாடுகள் துவாரகையில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவற்றை மேற்பார்வை செய்து கொண்டிருந்த பல ராமன் அருகிலிருந்த அமைச்சரை நோக்கி ' என்ன? திருமண ஏற்பாடுகள் யாவும் செம்மையாக நடைபெற் றுக் கொண்டிருக்கின்றனவா?’ என்று கேட்டான். அதற்கு அந்த அமைச்சன் ‘அரசே? பாட்டில் சிறந்த பாடகிகளையும், ஆட்டத்தில் சிறந்த அணங்குகளையும் மிகநீட்டாய் ஏற்பாடு செய்திருக்கிறேன். கேட்டால் கேளுங்கள், விட்டால் விடுங்கள்!' என்று பதில் சொன் னான். Neat என்பது ஆங்கிலச் சொல்.

பக்கத்தில் இருந்த நடிகர்ஒருவர் பாவேந்தரைப்பார்த்து "ஐயா! இராவணன் காலத்தில் நீட்" என்ற சொல் இருந்ததா?’ என்று கேட்டார். அதைக் கேட்டுப் பாவேந்தர் கோபித்துக் கொள்ளவில்லை; சிரித்தார்.