பக்கம்:குறள் நானூறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானே என் காமத்தை வெளிக்காட்டாமல் மறைக்க முனைகின்றேன். எப்படி எழும் தும்மலைத் தடுத்து நிறுத்த முடியாதோ அதுபோன்று காமமும் என்ன்ை மீறி வெளிப்பட்டுவிடுக்கிறது. 376

அவருடன் ஊடல்கொண்டு பூசல் விளைப்போம்' என்றுதான் அவர்பால் அணுகினேன். எனக்கு முன்னர் எனது நெஞ்சம் அவரிடம் ஒடிக்கொள்ள முந்தியது. அத்னை அறிந்த யான் ஊடல்ை மறந்தேன். ஒடி அவரைத் தழுவிக்கொண்டேன். 377

நெருப்பில் கொழுப்பு போன்று அவர் க்ாதலில் பட்டு என் நெஞ்சம் உருகுகின்றது. இத்தகைய நெஞ் சத்தைக் கொண்ட நான் அவ்ரை நெருங்கியபின் ஊடல்கொண்டு தழுவாது நிற்போம்" என்று கூறவும் முடியவில்லை. - 37.8

அவர் என்னேவிட்டுப் பிரிந்து சென்ருர். அவர் வருகையைப்பார்த்துப் பார்த்துக் கண்கள் ஒளியிழந்து மங்கிப்போயின. அவர் சென்ற நாள்களை எண்ண விரலோடு விரலை ஒற்றியதால் விரல்களும் தேய்ந்து போயின. 379

என்னைப் பிரிந்து நெடுந் தொலைவான இடத்திற்குச் சென்ற காதலர் வரும் நாளை நினைந்து ஏங்குவர் காதலியர். அவர்க்கு ஒரு நாள் ஏழு நாள்போல மெது வாகக் கழியும். 380

置器感

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/168&oldid=555665" இலிருந்து மீள்விக்கப்பட்டது