பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகூடசுந்தரம்

25


பெண் முட்டையும் ஒன்று சேர்ந்து கர்ப்பப் பையில் தங்கி குழந்தையாக பூரணமாக வளர்ந்து வெளியே வந்து பிறக்கும் வரையிலும் வேறு ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்தால் அவை குழந்தையாக வளர வேறு இடம் கிடையாதாதலால் அவைகள் சேரா. இப்படி ஆண்தாதுவும் பெண் முட்டையும் அடிக்கடி சேர்ந்து குழந்தை உண்டாகாமாலிருப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு. பாப்பா:-ஆனல் அப்பா! இப்படி யில்லாமல் அடிக்கடி ஆண்தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்து குழந்தைகள் உண்டானல் நல்லதல்லவா? அப்படியானல் அம்மாவுக்கு அநேக தங்கச்சிகளும் தம்பிகளும் பிறப்பார்கள். அவர் களுடன் எல்லாம் விளையாடலாம் அல்லவா? அதிக சந்தோஷமா யிருக்குமல்லவா? அப்பா :-ஆம், அம்மா! அதிக சந்தோஷமாகத் தானிருக்கும். ஆனல் அப்படி அம்மா வயிற்றில் அடிக்கடி குழந்தைகள் உண்டாவதானுல் அம்மாவுக்கு நிரம்பக் கவிடிடம் அம்மா! o o பாப்பா;-ஆம் அப்பா! தங்கச்சி வயிற்றிலிருக்கும் பொழுது அம்மா அடிக்கடி வாந்தி பண்ணுவாள். வேலை செய்யவும் நடக்கவும் கஷ்டமாயிருக்கிறது என்று சொல்லுவாள். அப்பா:-ஆம் அம்மா! ஆண் தாதுவும் பெண் முட்டையும் முதலில் சேரும்பொழுது பெண்தாது நான் முன்னல் கூறியபடி ஒரு புள்ளி மாதிரிதா னிருக்கும், ஆண் தாதுவும் கண்ணுக்குத் தெரியாததாகத்தான் இருக்கும். அவை இரண்டும் சேர்ந்து கர்ப்பப்பைக்கு வந்து அதில் ஒட்டிக் கொண்டு வளர ஆரம்பிக்கும்பொழுது அது மிகமிகச் சிறியதாகவே இருக்கும். அப்பொழுது அம்மாவுக்குக் கொஞ்சங் கூடச் சிரமமாயிராது. அது பின்னல் வளரும் பொழுது வரவரக் கஷ்டமாக இருக்கும்.