பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

அந்தக் கேள்வியில் சிந்திய அலஷியத்துக்கு என்னைக் கைமிஞ்சியிருந்தால் கூடத் தாங்கிக் கொண்டிருந்திருப் பேன்.

அவன் ஒன்றுமே பேசவில்லை.

திடீரென்று அவன் அறைக்குத் திரும்பிச் சென்று உடனே வெளிப்பட்டுத் தடதட என்று மாடியிறங்கி சென்று விட்டான்.

தோளில் கித்தார் தொங்காட்டம் ஆடிற்று. அவனை நான் பார்த்தது அத்தோடு கடைசி. சில தீர்மானங்கள் முன்னாலேயே தெளிவாகிவிடும், தெரியா விட்டாலும்.

வடிகால் காணாத சீற்றம் என்னை அவன் அறைக்குத் தள்ளிக்கொண்டு போயிற்று.

உள்ளே சிலை கின்றுகொண்டிருந்தது. 'உம்-புறப்படு!”

புருவங்கள் வினாவில் உயர்ந்தன.

"கிளம்பு ஐ டோன்ட் கேர்.' வெறி பிடித்துக் கத்தி னேன். 'உன்னை உன் தகப்பனிடம் ஒப்படைச்சப்புறம் எப்படியேனும் குட்டிச் சுவராப்போ!'

சிலை புன்னகை புரிந்தது. எனக்கு மண்டை திகுதிகு வென எரிந்தது. வியர்த்தத்தில் அவள் தோள்கள் தூக்கிக் சலித்தன.

'உம் சீக்கிரம் புறப்படு. எட்டு மணிக்கு வண்டி!' எங்கள் பட்டணப் பிரவேசம் முடிந்தது.

காலை வண்டி காலியாகக் கிடைக்கும் என்கிற கினைப் பில் வருகிறோம். அப்படியே கினைத்துக் கொண்டு மற்ற