பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}4

வரும் வருவதால், காலை வண்டியில் அன்று கூட்டம் வழியும்.

ஆனால், இன்று அப்படியில்லை. ரிஸர்வேஷன் இல்லா மல் வந்த திடீருக்கு-அவசரத்துக்கு இடம் செளகர்யமாக, என் தாராளமாகவே இருந்தது. ஆனால், அவர்களுக்கு மூட்டை முடிச்சு என்ன தட்டுக்கெட்டுப் போனது? அவள் கையில் அவள் பெட்டியோடு சரி. அவரிடம் அதுவுமில்லை. புக்கிங் கிளார்க் ரொம்பவும் ஒத்தாசையாயிருந்தான். அவர்கள் பட படப்பைக் கண்டு க்யூ தாண்டி அவர்களுக்கு டிக்கெட் வழங்கிவிட்டான்.

அவள் பின்னால், கிழவரை ப்ளாட்டாரத்தில் சின்ற ஒரு இளவல் அலாக்காகத் தூக்கி பெட்டியில் தள்ளிக் கொண்டிருக்கையிலேயே வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. கெடுபிடி அடங்கி, மூச்சை வாங்கிக் கொண்டு அந்தப் பையனுக்கு வந்தனம் கூறுவதற்காக அவன் பக்கம் திரும்பு வதற்குள் வண்டி அவுட்டரைக் கடந்து கொண்டிருந்தது. கிழவருக்கு நெற்றி முத்திட்டு விட்டது. இந்த ப்ரயாசையே தாங்க முடியவில்லை. மனச்சலிப்பு கூடச் சேர்ந்த பின் என்ன செய்ய முடியும்?

தள்ளாமை என்பது இது தசனோ? உதவியாகவும் ஆளைத் தள்ளி விடுகிறார்கள், அந்த பையனைப் போல்.

வேண்டா விட்டாலும் இடித்துத் தள்ளுகிறார்கள். தானாகவும் தள்ளாடுகிறது. தாம்பரம் தாண்டினதும் பித்த வெய்யிலோ ஏனோ வாயில் ஐலம் ஊறி ஊறி வாந்தி வருவது போல் மறுக்கி