பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ப்ரபு ரீ போனவன் போனவன் தானா? திரும்ப வந்தி ருப்பையா? நான் அங்கு விட்டு வந்தபின் நீ எங்கு போனால் என்ன என்று என்னால் இருக்க முடியல் லியேடா!

நானே இனி இங்கு எப்படி இருப்பேன் முதலில் உஊரை விட்டு இங்கு வந்தது தப்பு. அதைவிடத் தப்பு, இங்கிருந்து அங்கே திரும்பிப் போனது. இப்படியெல்லாம் வரும் என்றா கண்டேன். மூட்டம் கலைந்த சிதையாகி விட் டேனே! அம்மா தாங்க முடியலியே!

'அட சட்' வெடுக்கென உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். இதேஒப்பாரி என் ஆண்மைக்குத் தகுதியா? அடுத்தது என்ன? இந்தக் கேள்வி தோனும் வரை செத்துப் போய் விட்டேன் என்பது ஏது? ஊசி நுனியில் மத்தாப்புப் பொறியும் துணை வெளிச்சம் தானே!

ஆனால், இங்கு நேரம் தள்ளுவது இனி முடியாது. வட்டத்தின் விட்டத்தில் இன்னொரு குடிசையைத் தேடனும். அங்கேயும் ஒரு ஜ்யார்ஜ் இட்ம் மாட்டிக் கொள் ளக்கூடாது. உர்ஸ் கூடவே கூடாது.

என் சொத்துக்கள், புத்தகங்கள் இத்தனையும் தூக்க வழியில்லை. எண்சாண் உடம்புக்கு சிரஸே பிரதானம், சிரசுக்கு முழியே பிரதானம் என்கிற பழமொழிப்படிசிரிப்பு வந்தது-ஏதோ போறுக்கி நாலைந்து...மிச்சத்தை ஜ்யார்ஜ் எடைக்கு போட்டு விடுவார். எனக்கு உயிர்காடி. அவருக்கு ஒரு மொங்தைக்கு ஆனால் சரி. மதிப்பீடுகள் கண்ணெதிரேயே எப்படி மாறுகின்றனl எது கிரந்தரம்? சுயநலம் ஒண்ணுதான் கிரந்தரம்.

மதுரம், என்னை நீ வேடிக்கை பார்த்து விட்டாய். இந்த அஞ்சு வருடங்களாக கான் கட்டிக் கொண்டதாக