பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் பொங்கிவரும் புதுவெள்ளப் பேற்றைத் தாவிப் புகுந்தணையுங் கெண்டையென அவரைக் கிட்டித் தங்கஉடற் புறத்தையொரு கைய ளாவ, தளிர்முகவாய் தொட்டொருகை அசைக்க, முன்நாள் திங்களின்முன் நான்கினைத்த எண்ணம் எல்லாம் திறந்துசொல எனவிடுத்து நாண மே,நீ எங்கேனும் துளிநேரம் ஒதுங்கல் இன்றி எதிர்ப்பியக்கம் நடத்துவதும் முறையோ சொல்லாய் ! தண்டமிழச் செம்மலினர் கன்னஞ் சேர்த்துத் தழுவுகையில் குளிரேற்றும் தண்ணுர் கன்னம் கொண்டலிட்ட பனிக்கல்லோ; தோலெ டுத்துக் கொடுக்கின்ற இளநுங்கோ எதுதான் என்றே கண்டுவிடத் துணிந்திருந்தேன் 1 கனிவாய் வந்தார். கழுத்தசைத்தேன் குனிந்ததலை நிமிரா வண்ணம் மண்டையடி யாயடித்தாய் காண மே,ே மகிழ்ச்சிக்குத் தடைவிதித்தல் முறையோ சொல்லாய் ! (எண்சீர் ஆசிரிய விருத்தங்கள். ) 22