பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் இளங்கவிஞர் அ. அறிவொளி அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : முத்தடுக்காய் நம்பெருமை எடுத்துக் கூறி முயன்றிடுக நல்வாழ்வுக் கென்று சொல்லும் தித்திக்கும் பாட்டிதுதான் - வாழ்க்கைக் கப்பல் திருப்புகின்ற சுக்கானுய் அமைந்த தென்பேன் ! [9-3) அ. அறிவொளி. வாழ்க! வாழ்க! உள்ளத்தை உவப்பிக்கும் ஈரடிகள், உலகோரை உயிர்ப்பிக்குஞ் சீருரைகள், கள்ளத்தை வஞ்சத்தைக் கசடதனைக் கல்லியெறி முப்பாலாங் திருக்குறளை, தெள்ளுற்ற தமிழினத்தின் வாழ்வியலைத் தெளிவாக்கும் ஆடியெனச் செய்தமைத்தான்; வள்ளுவப்பேர்ப் பெரும்பெம்மான் எம்மினத்தின் வளமான தலைமகன்சீர் வாழ்கவாழ்க ! 64