14 சங்க இலக்கியத்தில் உவமைகள்
பொன்னும் மணியும் போலும் யாழதின் தன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்.
-நற். 166/1-2
இத்தகைய அமைப்பை உடைய பல எடுத்துக்காட்டு
களைச் சங்க இலக்கியத்தினின்று காட்ட முடிகிறது. மிகுதி பற்றி
ஒரு சிலவே ஈண்டுக் காட்டப்படுகின்றன.
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல். -நற் 10/1-2
மணியேர் நெய்தல் மாமலர் நிறையப் பொன்னேர் நுண்தாது புன்னை தாஅம்.
-நற் 78/2-3
பொன்னுடை மணியன்ன மாமை. -கலி, 48/17
பொன்வாய் மணிச்சிரல். -பத். 3/1-1
இவ்வமைப்புப் பெருகிய வழக்காக உள்ளது.
12.3.2. மகளிரைப் பாவைக்கும் அவர்கள் உறையும் இல்லினை ஒவியத்திற்கும் உவமைப்படுத்தி இணைத்துக் கூறல் ஒரு மரபாக உள்ளது.
ஒவத் தன்ன இடனுடை வரைப்பில்
பாவை அன்ன நப்புறங் காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்.
-நற். 18/2-4
ஒவத்தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன நல்லோள் கணவன். -பதிற். 61/3-4
ஒவத் தன்ன உருகெழு நெடுநகர் பாவை அன்ன மகளிர் நாப்பண். -பதிற்.
ஒவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன பலராய் மாண்கவின். -98/11-12
ஒவத் தன்ன இடனுடைவரைப்பு பாவை அன்ன குறுந்தொடி மகளிர். -புறம். 251/12
12.3.3. ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய இவை ஐந்தும் இணைத்துக் கூறப்படுதல் ஒரு