உவமை வகைகள் 15
மரபாக விளங்கியது. இவற்றுள் ஒரு சில கூட்டியும் குறைத்தும் கூறுதலும் உண்டு.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்டே.
-குறு.3/1-4
நீர்நிலம் தீவளி விசும்பொடு ஐந்தும் அளந்து கடை அறியினும் அளப்பருங் குரையை.
-பதிற். 24/15-16
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீர் ஒரன்ன சாயல் தீஒ ரன்ன என்உரன் அவித்தன்றே. -குறு.98/4-5
நிலம் நீர் வளிவிசும்பு என்ற நான்கின் அளப்பு அரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்து ஒருங்குபுணர்த்த விளக்கத்து அனையை.
-பதிற் 14/1-4
ஈரம் உடைமையின் நீர்ஒர் அனையை
அளப்பு அரு மையின் இருவிசும்பு அனையை
கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை
-பதிற். 90/14-16
மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய வீசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போல. -புறம் 2/16
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞயிற்றுப் பரிப்பும் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர் போல. -புறம். 30/1-5
காற்றொடு
எரிநிகழ்ந்தன்ன செலவின். -புறம்,41/16-17