பக்கம்:சுமைதாங்கி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டை

கோவேந்தர் கொலுவிருந் த கோட்டை' என்பேர்;

குளிர்பட்டுக் கோட்டையாகான்? இல்லை; அன்று நாவாய்கள் ஒட்டிவந்த மேனுட் டாரை

நயந்தகள்ளிக் கோட்டையாகான்? இல்லை; தேசிங் சாவோடு போராடித் தன்னுட் சிக்கோர்

சான்றுசெஞ்சிக் கோட்டையா கான்இல்லை; முன்னுள்: மேவாத அரசுபல தில்லி தன்னில்

மீதிவைத்த செங்கோட்டை தானே? இல்லை.

மலேக்கோட்டை என்றிடுவீர் பிள்ளை யாரை

மனத்துக்குள் கினைத்தவாறே, அஃதும் அன்று! நிலைக்காத திப்புசுல்தான் புகழைப் பாடும்

நீள் வேலூர்க் கோட்டைதானே? நிசமாய் இல்லை! சலிக்காமல் பால்பொழியும் காங்கே யத்துத்

தரமான பசுப்பண்ணை காக்கும் பண்பைத் தொலைக்காத பழையகோட்டை என்பீர்; இல்லை!

தொலைவிலுள்ள கேரளத்தின் எல்லே யான

செங்கோட்டை சந்திப்பா? அதுவும் அல்ல;

சிந்திக்க இடம்உண்டு; விடாதீர் கோட்டை!

வங்காளக் கடலோரம் ஆங்கி லேயர்

வந்தெடுத்த புனிதசார்சுக் கோட்டை அல்ல;

எங்கெங்கோ எவைஎவைக்கோ கனவு கண்டே ஏமாந்து மனக்கோட்டை கட்டு வோரேட

இங்கேயோர் கோட்டையெனில், முதலில் என்ன

எடுப்பான அடையாளம் அதற்குத் தேவை?

79.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/88&oldid=692165" இலிருந்து மீள்விக்கப்பட்டது