பக்கம்:செவ்வானம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.43 செவ்வாணம் ஓங்கி அறைந்திருப்பேன். அந்த இடத்திலேயே சுருண்டு விழும்படி சூடாகக் கொடுத்திருப்பேன். சின்ன மூதேவி! அதை அடித்துக் கொல்வதனாலே நமக்கு என்ன லாபம் வந்துவிடப்போகுது என்றுதான்விட்டு வைத்தேன் என்று புகைந்தது அவர் உள்ளம். அவருக்கு அமைதியேயில்லை. 'இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டாளே! இவளை ஊர் சிரிக்கும்படி செய்ய வேண்டாம்? இவள் இனிமேல் இந்த ஊரிலே கெளரவமாக வாழ்வதைப் பார்த்து விடுகிறேன். என்ன இருந்தாலும் குலப்புத்தி போகுமா? விபசாரத்திலே பிறந்ததுதானே. அதைச் சொல்லியிருக்கணும். அடடா, அந்த வேளையிலே ஞாபகம் வரலியே. அவளே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிற மாதிரிக் கேட்டிருக்கலாமே என்று குமைந்தார். அவரது கொதிப்பு தணியவேயில்லை. ஆகவே தனது திட்டங்களை நிறைவேற்றும் தீவிரவாதியாகிவிட்டார் அவர். தன்னுடைய ஆட்களுக்குப் பல யோசனைகள் கூறி அனுப்பினார். யார் யாரையோ பார்த்துப் பேசினார். இரண்டு மூன்று இஷ்டம் பணத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் அதற்கு என் பக்கம் கையை நீட்டி விடுங்கள் என்று ஆதரவளித்தார். தனியாகயிருந்த சிவசைலத்திற்க அனந்தம் பொங்கிய த இப்பொழுது தான் திட்டமிட்டது இம்முறை தோல்வியடையா என்ற நம்பிக்கை வளர வளர, தான் தனது அறையில் தங்கியிருக்கிற வேளையிலேயே தனது தாண் க்குள்ளான சக்தி வேகமாகக் கன் ಿ ಶ್ರೀ! த த வேலையைக் காட்டிவரும் என்ற எண்ணம் அவருக்கு உவகை எழுப்பியது. உற்சாகப் பெருக்கினால் தன்னை மறந்து, தனிமை, சூழ்நிலை என்பதையெல்லாம் மறந்து குலுங்கிச்சிரித்தார் சிவசைலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/142&oldid=841353" இலிருந்து மீள்விக்கப்பட்டது