பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோலாத

நஞ்சின் கொலை தவிர்த்தல்


தலும் வாளா இருத்தலும் என இருவகை விரிக்கின் 22. சிவாக்கிரயோகியர் தம் உரையில் இது பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

தோலாத- இல்லாத பேரிருள் தோலாத வானம்.

தோற்பாவைக் கூத்து - தோலால் ஆன பொம்மைக் கூத்து.

தோற்ற - இன்பதுன்பங்களைத் தோற்றுவிக்க.

தோற்றம் - :1) உண்டாதல், மலர்தல் இது கருத்தாவால் உண்டாவது, 2)சரம் அசரம் என இருவகை. 3)முட்டையிற் பிறப்பன, பையில் பிறப்பன (சராயுசம்) வேர்வையில் பிறப்பன (சுவேதசம்) மேற்பிளந்து பிறப்பன (உற்பிச்சம்).

தோற்றியதிதி- ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருள். தானே தோன்றியது அன்று. இங்கு உலகாயதர், பெளத்தர், ஆருகதர், பூர்வமீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், ஐரணிய கருப்பமதத்தினர் ஆகியோரது கொள்கைகள் மறுக்கப்பட்டுப் பதி உண்மை நிறுவப்படுகிறது.

தோற்றுவாய் - தொடக்கம்.

தோன்றிய - தன்வினைதானாக உண்டாகிய, ஒ. தோற்றிய.

நக- மகிழ எ-டு நிற்கவிமாந்தர்

நகரி - நகரம், பட்டணம்.

நக்கீரதேவ நாயனார் - 11 ஆம் திருமுறையில் இவர் அருளிய 10 நூல்களாவன. - 1) கயிலை பாதி காளாத்தி பாதி அந்தாதி.

2) திருஈங்கோய் மலை எழுபது.

3) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

4) திருவெழு கூற்றிருக்கை

5) பெருந்தேவபாணி.

6) கோபப் பிரசாதம்.

7) கார்எட்டு.

8) போற்றித் திருக்கலிவெண்பா

9) திருமுருகாற்றுப்படை

10) திருக்கண்ணப்ப தேவர் திருமறம்.

நகுலம் - கீரிப்பிள்ளை.

நகுலீசர் - இறைவனின் 18 அவதாரங்களில் ஒன்று.

நகை - அவமதிப்பு. எ-டு நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்தும் அன்றே (சிசிசுப5).

நங்கை - உமையவள், அணிகலன்.

நச்சினார் - தேவர்கள். எடு நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொடுத்தான் (சிபிப273).

நசித்தல் - கெடுதல்.

நசிப்பிலா - கேடிலாத, எ-டு நிகிப்பிலா மந்திரங்கள்.

நஞ்சின் கொலை தவிர்த்தல் - பா.திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்.(தி.ப71) நட்சத்திரம் விண்மீன் 27.

1)அசுவினி 2)பரணி 3)கார்த்திகை 4)உரோகணி 5)மிருக சீரிடம் 6)திருவாதிரை 7)புனர்பூசம் 8)பூசம் 9)ஆயிலியம் 10)மகம் 11)பூரம் 12)உத்திரம் 13)அத்தம் 14)சித்திரை 15)சுவாதி 16)விசாகம் 17)அனுடம் 18)கேட்டை 19)மூலம் 20)பூராடம் 21)உத்திராடம் 22)திருவோணம் 23)அவிட்டம் 24)சதயம் 25)பூரட்டாதி 26)உத்திரட்டாதி 27)இரேவதி.

164