பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெறப்படும். இந்நுட்பம்,

'அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்

திறனளித்தேம் வீடு தெளிந்தேம்”

(திருவள்ளுவமாலை 5.0)

எனவரும் திருவள்ளுவமாலையால் இனிது புலனாதல் காணலாம்.

மேற்குறித்த உறுதிப்பொருள் நான்கினுள் இறுதிக் கண்னதாகிய வீடுபேற்றுநிலை, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களிலும் துறவற இயலில் அருளுடைமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவுறுத்தல் என்னும் ஐந்து அதிகாரங்களிலும் தெளிவாக உணர்த்தப் பெற்றுள்ளன. இந்நுட்பத்தினைத் தெளிய வுனர்ந்த சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் மெய்வைத்த சொற்பொருள் நுட்பங்களை விரித்து விளக்கும் நோக்குடன் வீட்டு நெறிப்பாலாகத் திருவருட் பயன் என்னும் சைவ சித்தாந்த நூலை அருளிச் செய்துள்ளார். தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களால் அறிவுறுத்தப்பெறும் தெய்வங்கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடைய புலமைச்செல்வர் திருவள்ளுவர் என்பதும் அவர் இயற்றி யருளிய திருக்குறள் மெய்யுணர்வினால் உணர்ந்துரைத்த பேருண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தமிழ் மறையென்பதும்,

"தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்”

(நெஞ்சு விடுதூது.கண்ணி 23-25)

எனவரும் உமாபதி சிவாச்சாரியார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.