பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

481


பொருள்கள் மெய்ந்நூற் கொள்கையினாற் குறிக்கொண்டு கருதத் தக்கனவாம் என்பது நன்கு புலனாகும். மேற்குறித்த நான்கு பொருள்களையும் சிவநெறியாளர்கள்தம் சமயத்துக் குரிய சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டுள்ளனர். இப்பொருள் நான் கினையும் சைவ சமயத்துக்கேயுரிய சிறப்புடையனவாகச் சாக்கிய நாயனார் தெளிந்துணர்ந்த திறத்தினை,

"செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்தபொருள்

எனக்கொண்டே இவ்வியல்பு சைவ நெறியல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள்சிவ மென்றருளாலே

யுணர்ந்திருந்தார்” (பெரிய, சாக்கிய 5)

எனச் சேக்கிழார் நாயனார் வகுத்து அருளிச் செய்துள்ளமையும் அவர் அருளியவண்ணமே சைவசமய சந்தான ஆசிரியருள் ஒருவராகிய உமாபதி சிவனாரும் இந்தப் பொருள்களையும்,

"செய்வானுஞ் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பானும் உய்வான் உளனென்றுணர்” (திருவருட்பயன் 5)

எனச் சைவசமயத்தத்துவ நுண்பாருள்களாக எடுத் தாண்டுள்ளமையும் திருக்குறள் கூறும் தத்துவ நெறியினை அடிப்படையாகக் கொண்டது சைவசித்தாந்தத் தத்துவ நெறி என்னும் உண்மையை நன்கு தெளிவுபடுத்துதல் காணலாம்.

உயிர்கள் முன்செய்த வினையின் பயனாகிய ஊழினால் உறுதற்பாலனவாகிய இன்பத் துன்பநுகர்ச்சிகளை ஊழ்ஊட்டாது கழியுமானால் உலகில் வறுமை காரணமாக நுகர் தற்குரிய பொருள்கள் இல்லாதவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறக்குங் கருத்துடையராவர் என்பார்,

"துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியுமெனின்’ (திருக். 378)

சி. சா. வ. 31