பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வேண்டுதல் வேண்டாமையிலானாகிய கடவுளைக் குறித்து வழங்கும் 'இறை என்னும் சொல் நல்லார்க்கும். பொல்லார்க்கும் நடுநின்று நீதிவழங்கும் இறைவனது தன்மையாகிய நடுவுநிலைமை என்ற பொருளிலும் ஆளப்பெறுதல் உண்டு. இந்நுட்பம்,

"ஓர்ந்துகண்ணோடா திறைபுரிந்தியார்மாட்டும்

தேர்ந்துசெய்வஃதே முறை” (திருக். 544)

எனவரும் திருக்குறளாலும், “நடுவுநிற்றல் இறைக்கு இயல்பாதலின் அதனை 'இறை என்றும்”, எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கத்தாலும் இனிது புலனாம்.

உயிர்கள் இயல்பாகவே அறிவுடையனவாயினும் தோற்றமில் காலமாகத் தம்மைப் பற்றியுள்ள பாசப் பிணிப்பினால் மறைக்கப்பட்டு அறியாமையில் அகப் பட்டுள்ளன என்பதும் தோண்டத்தோண்ட மணற்கேணி நீர் ஊறுமாறு போன்று மக்கள் இடைவிடாது கல்வி பயிலுந்தோறும் அவர்தம் அறிவு மேம்பட்டு விளங்கும் எனவும் ஒரு பிறப்பிற் கற்ற கல்வியறிவு அவர் பெறும் எழுபிறப்புக்களிலும் தொடரும் எனவும் மக்கள் ஒவ்வொரு பொருளையும் பற்றி அறியுந்தோறும் அதற்கு முன் அப்பெர்ருளைப் பற்றியறியாதிருந்தமை அவர்க்குப் புலப்பட்டு மேலும் மேலும் பொருள்ையறிதற்கு முற்படும் அறிவுநாட்டம் தோன்றி அவர்கட்கு இன்பம் தரும் என்பதும் அறனறிந்து மூத்த அறிவுடையாராகிய சான்றோர்கள் பிறர் உற்ற நோய்களை நீக்கி அந்நோய்கள் மீண்டும் வந்தடையாதவாறு தடுத்து நிறுத்தும் தகைமையுடையார் என்பதும் அத்தகைய சான்றோரினத்திற் சார்ந்தால் மக்கள் உயர்வு பெறலாம் என்பதும்,

"தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு” (திருக். 396) "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவற்

கெழுமையும் ஏமாப்புடைத்து” (திருக். 398)

'அறிதோ றறியாமை கண்டற்றால்’ (திருக்.11.10)