பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல்இளங் காற்றவளின் செய்திமனந் ததுவே

தென்றல்இளங் காற்றவளின் செய்தியைக்கொண் டதுவே.

கிரெம்லின்மணி ஓசைஎங்கும் கேட்டினித்தல் போலே விரைந்திசையும் விரிவுலகின் நாடெங்கும் விரியும்.

அவளுக்கே மூச்செறிந்தேன் இளைஞனாம்.அந் நாளில் அவளுக்கே அரற்றினேன் அறிவில்லாப் போதில்.

உண்மையிலே ஒருமுறைதான் அவளைமுத்த மிட்டேன் அன்றிருந்தே அவளின்றி அலறிடும்என் நெஞ்சம்.

நல்லாண்மை யோடவளை நான்முத்த மிட்டேன் பல்லாண்டு பல்லாண்டாய் உதிர்ந்திடும்என் கண்ணிர்.

பெருவானில் முகிற்கப்பல் பீடுடனே செல்லும் உருசியமே, பொன்னாடே, என்காதல் வெல்லும்.

1 3