பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலச்சிறார் கருமைதனில் வெள்ளைநிறத் தாலும்,

வெள்ளைநிறக் குறிப்பேட்டில் கருமைநிறத் தாலும்

வேண்டோம்,கொடும் போரைவெறுப் போம்போம்’ என

(வரைவார்.

ஆக்கச்செயல் பலபண்ணுவர் உயர்சோவியத்து மக்கள் அகழ்வார்நிலக் கரியை.அரும் மந்தைகளைக் காப்பார் : ஊக்கம்மிகும் உழைப்பால்எழும் ஒளிர்சோவியத்துச் சிறுவர் உண்டாக்கிடக் கற்பார்பல உலகோங்கிடும் சொற்கள்.

எழுத்தைத்தொடர்ந் தெழுத்தாய்எழுத் தமையும்இசை யோடே எழும்சொற்களும் ஒன்றன்பினால் ஒன்றாய்த்தொடர்ந்

fதுரைக்கும்; எழுகஉல. கெங்கும்நட் ஆமைதிஅனை வர்க்கும் இணைகஉயர் ஈடில்பொது வுடைமைநல வாழ்வே.

போரும்உயிர் அழிக்கும்கொடும் பூசல்இனி வேண்டா, பொன்னானநம் இளைஞர்மதி முதியோர்தமக் கெல்லாம் சீரும்,பொலி மகிழ்வூட்டிடும் உலகம்இது வாகும்’ எனச்சோவியத்துச் சிறுவர்மகிழ்ந் தெழுதித்தாய் மொழியை இன்புற்றுமே தென்புற்றுமே உலகோங்கிடக் கற்பார்.

127