பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயகோ விசுகியால், சுவட்லோ வால் நான் வாங்கப் பட்டேன். பாட்டுகள் உயிர்கொளும் மாபெரும் நாட்டினாலும், எங்கே மகிழ்ச்சி நாள்தொறும் இரட்டிப் பாகுமோ, எங்கே செல்வம் எதிர்கா லத்திற்கு எமக்கே சேர்க்கப் படுமோ, ~, எங்கே இடுக்கண், இன்னல், இடர்ப்பா டிருப்பினும் அங்கே தழல்பெறும் நெஞ்சங் களாலும் வாங்கப் பட்டேன். முழுது மாகநான் வாங்கப் பட்டேன், அடக்கி மடக்கி வாங்கப் பட்டேன். என்னிடம் வாங்க இனிஒன்றும் இல்லையே.

16. I 1 I