பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ரசூல் J6m)IT அசர்பைசான்

(0. 1910)

நால்வர்

நால்வர் சந்தித்தோம் -

நம்பிக்கை, ஐயம், கவலை, நான்.

நேரமோ நள்ளிரா

நிறைந்தது பெருமழை

காற்று உறுமிற்று.

நம்பிக்கை நவின்றது :

மழையும் நின்றிடும், காற்றும் ஒய்ந்திடும் இரவும் முடிவுறும், பொழுதும் விடிந்திடும் பொன்கதிர்ப் பரிதி முன் எழுந் திடுமே.

ஐயம் புகன்றது :

எப்பொழுது? வினவுவேன் எப்பொழுது? மழைபனி யானால்? காற்றும் புயலாய் இரவு நீடித்தால், என்ன செய்வது?

கவலை கழறிற்று :

மழை நின் றாலும், காற்றடங் கிடினும் என்ன அதனால்? என்னுளே புலம்பும் தனிமையின் ஏக்கம் விடியலில் விடியுமா?

  1. 69