இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69
ரசூல் J6m)IT அசர்பைசான்
(0. 1910)
நால்வர்
நால்வர் சந்தித்தோம் -
நம்பிக்கை, ஐயம், கவலை, நான்.
நேரமோ நள்ளிரா
நிறைந்தது பெருமழை
காற்று உறுமிற்று.
நம்பிக்கை நவின்றது :
மழையும் நின்றிடும், காற்றும் ஒய்ந்திடும் இரவும் முடிவுறும், பொழுதும் விடிந்திடும் பொன்கதிர்ப் பரிதி முன் எழுந் திடுமே.
ஐயம் புகன்றது :
எப்பொழுது? வினவுவேன் எப்பொழுது? மழைபனி யானால்? காற்றும் புயலாய் இரவு நீடித்தால், என்ன செய்வது?
கவலை கழறிற்று :
மழை நின் றாலும், காற்றடங் கிடினும் என்ன அதனால்? என்னுளே புலம்பும் தனிமையின் ஏக்கம் விடியலில் விடியுமா?
- 69