பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த இலாவோசுக் காட்டின் மேலே அமெரிக்க இளைஞர் பறந்துகொண் டிருந்தனர். இருக்கைக் கச்சையை இறுக்கிக் கட்டிப் போர்த்தழல் வேர்கொண் டிருந்த எல்லையில் பறந்துகொண் டிருந்தனர். அநாய்நகர்க் கூட்டத்துக்கு அவர்கள் சென்றதும் அடையாளத் தாள்களை அழலில் பொசுக்குவர். வெளித்தெரி யாமல் கைகள் இறுகிட எங்களுக் கெல்லாம் அயலவ ராக அங்கே பறந்தனர். அடுத்த நொடியில் குதிக்கப் போகும் குதிகுடைக் காரர்போல் பதற்றத் தோடு பார்க்கின் றனரே!

போரிஸ் காபடோவ் தாய்க்கு

முதலில் நம்ப முடியவே இல்லை. ஒடஸ்டா விலிருந்து கடற்படை இளைஞர் ஐபாங் நாவாய்க் குறட்டில் (போரில் மாண்ட சீர்எழுத் தாளர்) போரிஸ் காபடோவ் பெயர்பெறு கப்பற்கு வண்ணம் தீட்டும் வாகினைக் கண்டேன். போரிசைக் கண்டுநான் நாள்பல ஆயின. நலந்தான். மூச்சும் நன்றாய் இழுக்கிறார்; நடப்பதில் சளைத்திலர் என்றே கூறுவர்; ஆயினும், இரங்கத் தக்கது ஒன்றுண்டு, அவர்தம் நண்பர்க் கேதும்மடல் எழுதினார் இல்லை. இருப்பினும் என்ன் நல்ல ஒருபணி நண்ணியது அவரை, விருப்ப மானதை அருமையாய்ப் பெற்றுளார்:

188