பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாளின் வெற்றிக்கோ எங்களுடை நன்றி இசைப்பெருமை மதிப்பினையும் யாம்தெரிவிக் கின்றோம். செந்நீரைப் பாய்ச்சிளங்கள் பாதைக்கு மேன்மை செய்தவரை யாம் நினைத்தல் நன்றிக்கு வித்தாம்.

மீண்டும்.மீண்டும் உரிமைப்போர்க் கருவிகளை ஏந்த நமைஅழைக்கும் முழுஉரிமை அவர்குருதிக் குண்டே, யாண்டும்.இங்கு மக்களுடைச் செங்குருதி பாய்ந்த நாடுதான் தலைநிமிரும் என்றுரைப்பார் அன்றோ !


ஆர்வத் துடிப்புன்றன் நாடிநரம்பினில் மோதுகையில்-மணிப்

போது பறந்திடும், ஊர்ந்திடும் பாழும் நிமியங்களே!

ஆர்ந்த படைப்பினில் ஆழ்ந்திடும் போதில் அடடேநீ-உன் உலகைநின் வாழ்வை முழுதும் மறந்து பறக்கையிலே

புத்தம் புதுமைகள் சொல்லொணா வண்ணம் பொலிகையிலே - உன் பொன்னான வாழ்வினை வாழ்ந்திடும் வேட்கையும் பொங்குகையில்

மெத்தப் பொழிந்த மகிழ்ச்சியின் கண்ணிரை எண்ணுகையில் - நீ மீண்டும்.அக் கண்ணிர் மிதந்திடா வண்ணம் நிறுத்திடலாம்.

ஒருவனின் ஆண்டு முதிர்ந்திடில் எஃகுளம் வேண்டுமடா - அதால் ஒடிய நாள்மின்னல் தன்னை நினைத்துப் புலம்பல்ஒழி!

23 1