பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

எவ்கெனி வினகூரவ் உருசியக் கூட்டரசு

(19. 1925)

மாபெரிய இயற்கை ஆற்றல்...

இயற்கைப் பெரும்பேர் ஆற்றல் பலவுள்

இசையும் ஒன்றாகும்.

யாதென விளங்கா அளவுக் கதனின்

ஈர்ப்பும் பெரிதாமே.

மயக்கும் ஆற்றல் அதனால் மேலும்

மேலும் மிகுமன்றே

மந்திரம் போலத் தொடர்ஒவ் வொன்றும்...

நெஞ்சைப் பிணித்திடுமே.

கண்ணிர் காணாக் கண்ணில் கண்ணிர்

மல்கிடச் செய்திடுமே,

கருத்தில் இனித்துச் செயலறச் செய்யும்

கனியும் கிறக்கமடா!

மண்ணில் மாந்த நரம்புகள் ஊடே

மகிழ்ந்து பாய்ந்திடுதே!

கண்ணில் படாமல் நீரில் உப்பாய்

எங்கும் கரைந்துளதே.


2 38