பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைக் காண நண்பன் எய்தினான்: ஐயத் துடன்அவன் பொம்மையை நோக்கினான்;

உண்மையாய், ஆயப் பெற்றவை தாமா உறுதியா?’’ என்றவன் வினவினான். தீய விளைவுஇதில் புதையுண் டிருக்கலாம் என்றுஎச் சரித்தான்: மேலும், விளையாட்டு இல்லை. இது என விளம்பினான்.

ஆயினும், மரத்தால் ஆன இரண்டு பொம்மைகள் என்அறைச் சுவரில் தொங்கிக்கொண் டிருந்தன. மீண்டும் நண்பன் ஈண்டுஎன் அறைக்குள் தீங்கின் கமுக்கம் தெரியப் படுத்தும் கருவியைக் கொண்டு வரவும் கூடும். கதிரியக்கக் கலப்புள தாகக் கண்டு தொல்லைப் படநான் துணிந்துள தாக வற்பு றுத்தி அறையவும் கூடும்.

ஆயினும், அவ்விரு பொம்மை யையும் அப்படி யேதான் அங்குவைத் திருப்பேன். பருத்த ஈயச் சுவர்க்குள் பருதியின் கதிர்களைக் கல்லறைப் படுத்தும் அச்செயல் தனினும்............... இச்செய லாலே இடர்மிகக் குறைவுதான். பட்ட செர்ரி மரத்தினால் செய்த சப்பா னியரின் இரண்டு பொம்மைகள் என்னறைச் சுவரில் தொங்குகின் றனவே.

33