பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 செளந்தர கோகிலம் கேட்டுக்கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டு, அதை அப்படியே எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் பொய் சொல்லுகிறார்களென்றால், அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீர் பெரிய உத்தியோகம் வகிப்பவராக இருந்தும் உமக்கு இவ்வளவு தூரம் வியவகார ஞானம் தெரியாமல் போனது ஆச்சரியமான விஷயமே. நீர் என்னிடத்தில் இவ்விதமான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்று மறுத்துவிட்டால், அது உமக்கு நிரம்பவும் அநுகூலமாய்ப் போய்விடுமென்று நீர் நினைத்துக்கொண்டீர் போலிருக்கிறது. முக்கியஸ்தர்களான நாங்கள் ஐவரும் கேட்டுக்கொண்டிருந்த விஷயத்தை நீர் மறுத்து அது நடக்கவில்லையென்றால் அதை எவரும் கேட்கப்போகிறதில்லை. அப்படிச் சொன்னதால், நீர் பெருத்த புரட்டுக்கார மனிதர் என்பதை எங்களுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியதாயிற்றேயன்றி வேறல்ல. நீர் இவ்விதமான புரட்டில் இறங்காமல், செய்ததை ஒப்புக்கொண்டிருந்தால் என்னுடைய தீர்மானம் கொஞ்சம் கடுமைக் குறைவாக இருந்திருக்கும். ஆயினும், இது வரையில் நீர் செய்துள்ள அக்கிரமங்களெல்லாம் திரண்டுவந்து இந்தச் சமயத்தில் நீர் இப்படி நடந்துகொள்ளும்படி உமக்குப் புத்தி கொடுத்தது. நீர் எத்தனை நிரபராதிகளைத் தண்டனைக்குக் கொணர்ந்து, அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் துயரக் கடலில் ஆழ்த்தி வயிறெரியச்செய்து. அவர்களுடைய குடும்பங்களை நாசப்படுத்தினிரோ? அது ஈசனுக்கே தெரிய வேண்டும். இப்போது எங்களுக்குத் தெரிந்து நீர் அநியாயமாக ஒரு குடும்பத்தை நாசப்படுத்தி நிரபராதியான ஒரு மனிதனை மூன்று தடவை தண்டனைக்கு ஆளாக்கி விட்டீர் உம்முடைய விஷயத்தில் நான் கொஞ்சமும் தயாளம் காட்டுவது தவறாகும். இப்போது ஆடுகள் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிற மனிதரை நான் இந்த நிமிஷம் முதல் கெளரதையாகவும் கண்ணியமாகவும் விடுதலை செய்திருக்கிறேன். அதுவுமன்றி, இதற்குமுன் அவருக்கு நேரிட்ட தண்டனையும் தப்பானது என்றும், அவர் மூன்று வழக்குகளிலும் நிரபராதி என்றும் நான் இந்த சமஸ்தானம் முழுவதும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தச் செய்கிறேன். நீர் செய்த அக்கிரமத்தால் புருஷன் பெண்சாதி