பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 73

குழந்தையை அடக்கம் செய்துவிட்டு இன்னும் ஒரு நாழிகைக் காலத்தில் வந்துவிடுவார்கள். உடனே நீ புறப்பட்டுப் போய் விடலாம். நான் இப்போதுகூட டெலிபோனில் என் தங்கையோடு பேசி, இன்னும் ஒரு நாழிகைக் காலத்தில் உன்னைப் பத்திரமாய் அங்கே கொண்டுவந்து சேர்ப்பதாகச் சொல்லிவிட்டு வந்தேன். இருந்தது இருந்தாய், பல்லைக் கடித்துக்கொண்டு இன்னும் ஒரு நாழிகை இருந்துவிட்டு உடனே புறப்பட்டுப் போகலாம். இப்போது விளக்கு வைக்கும் நேரமாகிவிட்டது. இங்கே இராத்திரி ஆகவேண்டிய சமையலும் ஆகிவிட்டதாம். காசாரிகள் வருவதற்குள் நீ உன்னுடைய சாப்பாட்டையும் முடித்துக்கொள். ‘பசி இல்லை; வீட்டில் போய்ச் சாப்பிடுகிறேன், என்ற ஆட்சேபனைகளை நீ சொல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏற்படும்படி நீ எப்படியாவது கொஞ்சம் சாப்பிடவேண்டும்.” என்று வருந்தி நயமாக வற்புறுத்தி வாஞ்சையோடு கேட்டுக்கொண்டார். நமது பெண்மணி விரைவில் தங்களது பங்களாவுக்குப் ப்ோய்ச்சேர வேண்டுமென்றும், அவர் கூறிய சந்தோஷச் செய்தியைத் தனது தங்கைக்கும் தாயாருக்கும் தெரிவித்து முக்கியமாய்த் தனது தங்கையைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்றும், தனது தாய் தன்னைத் தேடிக்கொண்டுபோன இடங்களில் கண்ணபிரான் முதலியாரைப் பற்றிய செய்தி எதையாகிலும் தெரிந்துகொண்டு வந்திருக்கலாம். ஆதலால், அதையெல்லாம் தான் கேட்டு அறியவேண்டுமென்றும் அளவற்ற ஆவலும் துடிதுடிப்பும் கொண்டு தன் மனநிலைமையை வெளியிடமாட்டாதவளாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், வண்டியை ஒட்டுவதற் குக் காசாரி எவரும் இல்லாமற் போனமையால், தான் சுந்தர மூர்த்தி முதலியாரது வேண்டுகோளை மறுப்பதனால் அவரது மனம் புண்படுமேயன்றி, தனக்கு எவ்வித அநுகூலமும் ஏற்படாதென்று கண்டு, அவரது விருப்பத்தின்படியே போஜனம் செய்வதாக இணங்கினாள். அதைக் கேட்டு சுந்தரமூர்த்தி முதலியார் அளவற்ற பூரிப்படைந்தவராய் அவ்விடத்தைவிட்டு , அப்பால் போய்விட்டார்.

+