பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

வல்லிக்கண்ணன்


முடியவில்லை‘ என்று சுய விமர்சனம் செய்துகொண்டு பத்திரிகையை நிறுத்துவதற்கு ஒரு துணிவு வேண்டும். .

பத்திரிகை நடத்தும் ஆசையோடு முற்படுகிறவர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனைத் தெளிவும் சுய விமர்சன நேர்மையும், மனத்துணிவும் இல்லாத காரணத்தினாலேயே பல சிற்றேடுகள் தரம் எதுவுமின்றி, வெகு சாதாரண ஏடுகளாகவும், வணிக நோக்குப் பத்திரிகைகளின் மசாலாத்தனங்களைக் காப்பி அடித்தபடி சாரமும் சத்தும் இல்லாத அச்சுத் தாள்களாகவும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த விதமான முயற்சிகளினால் யாருக்கும்- பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், பத்திரிகை படிப்பவர்களுக்கும்தான், எந்தவிதமான பலனும் ஏற்படுவதில்லை. இதைச் சிறு பத்திரிகைகள் நடத்த முன்வருகிறவர்கள் கருத்தில் கொள்வது நல்லது.