பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

117



மல், பேசமட்டும் தெரிந்திருந்த மிகமிகப் பழங்காலத்து மக்கள், கொடுக்கல் வாங்கல் கணக்குகளைக் குறிக்கும் முறையில் முதல்முதல் கோடுகிழிக்கத் தொடங்கினர். இதுதான் அவர்கள் செய்த முதல் வரிவடிவ (எழுத்து உருவத்தில் உள்ள) மொழியாகும். இப்போதுங்கூட எழுதப்படிக்கத் தெரியாத நாட்டுப்புறத்துப் பெண்டிர், கொடுக்கல் வாங்கல்களைக் குறிப்பதற்காகக் கோடுகள் போட்டு வைக்கின்றனரல்லவா? எனவே, எழுதிவைக்கவேண்டிய இன்றியமையாமை இந்தக் கணக்கிலிருந்துதான் தொடங்கியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். இவ்வாறு தொடங்கிய கணக்குச் சுவடி பிறகு கணக்கு நூலாயிற்று. கல்வி கற்பதே கணக்குத் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்ற நிலை அன்று இருந்தது. இக்காலத்திலும் நாட்டுப்புற மக்கள் தம்பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு உரிய காரணமாக, ‘நாலு கணக்குத் தெரிந்து கொண்டால்தானே உலகத்தில் பிழைக்க முடியும்’ என்று கூறுவதைக் கேட்கலாம்.

இதற்கேற்பவே அக்காலத்தில் தமிழ்க்கணக்கு நூற்கள் மிகப் பெருகிப் பரந்துபட்டிருந்தன—இன்று இவை இருக்குமிடம் தெரியவில்லையே; இதை நினைத்து இப்போது பெருமூச்செறிந்து என்ன பயன்! – எள் நெய்யைக் குறிக்கும் எண்ணெய் என்னும் பெயர் பிறகு எல்லாவகையான எண்ணெய்களுக்கும் உரித்தானதைப்போல, இந்தக் கணக்கு என்னும் பெயரும் நாளடைவில் எல்லாவகையான நூற்களுக்கும் உரித்தாயிற்று. சங்க இலக்கியங்களைக்கூட மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று குறிப்பிடுகிறோமல்லவா? எனவே, கணக்கு என்றால் பொதுவாகப் புத்தகம் என்று பொருளாம். ஆகவே, கணக்கை ஆய்ந்து கற்பிக்கும்