பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

207



இரங்கியும், அழுதும், அயர்ந்தும், அருவருத்தும்,
குரங்கியும், கோடியும், கோதுகள் செய்தும்,
மருங்கில் பாணியை வைத்தும், வாங்கியும்,
இரங்கிப் பேசியும், எல்லேல் என்றும்,
இன்னவை பலவும் இயற்றுதல் இயல்பே.”

இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள பேடியின் செயல்கள் அனைத்தும் அப்படியே இயற்கையை ஒட்டி உள்ளன. இப்பாடலைப் படிப்பவர் தம் மனக்கண்முன் ஒரு பேடியின் உருவத்தை அப்படியே காணலாம்.

இந்த விதமாகத் திவாகரத்தின் பன்னிரண்டாந்தொகுதியில் அறிவுக்கு விருந்தான பல செய்திகள் படைக்கப்பட்டுள்ளன.

பின்னெழுந்த பல நிகண்டுகளுக்கும் முன்னோடியாகச் சேந்தன் திவாகரத்தைப் பயந்த ஆசிரியர் திவாகரர் பெரிதும் போற்றுதற்கு உரியவர். அவருக்குத் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.