பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வசன நடை பற்றி பாரதியார் 72 9. வசன நடை பற்றி பாரதியார் தமிழ் வசன நடை பற்றி பாரதியார் மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தனது உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார். அதில் மொழி பற்றிய அவருடைய கருத்தும் தெளிவாக வெளிப்படுகிறது. தமிழில் வசன நடை இப்போது தான் பிறந்து பல வருஷமாக வில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும் படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி. ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும், வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது. “பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது, அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனையில்லாமல் நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்தில் மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே