பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 73 நேர்மையும் தைர்யமும் இருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும், சண்டிமாடுபோல் ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசனநடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேராக தமிழ் நடையெழுதும்” என்று உரைநடை மொழி பற்றி மிகவும் அழுத்தமான சிறந்த கருத்துக்களை பாரதி இந்த வரிகளில் முன் வைத்துள்ளதைக் காணலாம். உரைநடை பற்றி பாரதி கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் ஆழ்ந்து படிக்கத்தக்கவை. தெளிவு, ஒளி, தண்மை ஒழுக்கம் ஆகியவை எழுத்திலும் இருக்க வேண்டும் என்பதை பாரதி மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். அத்துடன் பாரதி ஏற்கனவே கூறியுள்ள படி எழுத்துக்கு உண்மையும் நேர்மையும் அவசியமாகும்.