பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

தாஷ்கண்ட் வீரராகத் திகழப்போகும் தியாக சீலரின் தன்னலம் துறந்த வாழ்வைப்பற்றி எண்ணியவாறு இருந்தார்.

பெருமனைக்கு வைக்கப் படவேண்டிய பெயர்களை அவரவர்கள் தங்கள் போக்குப்படி பிரஸ் தாபித்தார்கள்.

காமாாஜுக்குக் காங்கிரஸ்தான் உயிர்; தாய் தந்தையரைப் போலவே! ஆகவே. அவன் தன் இஷ்டப்படி, 'காந்தி இல்லம்' என்று பெயர் சூட்ட விழைந்தான்.

மோகன்தாஸுக்கு பெரியார் தான் ஜீவன். அந்தப்போக்கில் அவன் தன் கருத்தைச் சொன்னான்.

நேருவுக்கு அண்ணாத்துரைதான் குரு. அவன் அந்தப்படியில் நின்று பெயரைவெளிப்படுத்தினான்.

கடைக்குட்டிக்கு ஜீவாதான் குறி. அவன் விருப்பப் பிரகாரம் பெயரை உரைத்தான்.

இந்தப் பிள்ளைகளின் ஆவல்களைப் பற்றிச் சிவசிதம்பரம் தம் மனையாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். பிள்ளைகளின் சொந்தக்கருத்துக்களில் குறுக்கிட விரும்பாதவர் அவர். ஆனாலும், அவரவர்களுக்கு உரிய, பருவம் வரும் வரை, அரசியல் பற்றி அக்கறை காட்டக்கூடாது என்றே ஆணை பிறப்பித்திருந்தார் அவர். இல்லை யென்றால் பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடாதா, என்ன?