பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வூர் “காந்தி உயர்நிலைப்பள்ளி!”...பள்ளிப் பிள்ளை களுக்கு ஆபத்துக்கு உதவும் பேற்றை நமது வீடு அடைந்திருக்கிறது. அதற்காக நாம் எவ்வளவோ பெருமைப்பட வேண்டும்!” என்று உணர்ச்சிப் பெருக்கின் விம்மிதத்துடன் மொழிந்தார் சிவசிதம்பரம் அவர்கள்.

"தியாகி சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜே!” - என்ற கோஷங்கள் விண்முட்ட எழத்தொடங்கின.