பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

புதுமனை புகுவிழா ஆரம்பமானது.

“தாஷ்கண்ட் வீடு" என்னும் எழுத்துக்கள் துலாம்பரமாகப் பளிச்சிட்டு மின்னிக் கொண்டிருந்தன.

ஏழை எளியவர்களுக்கு அளித்த அன்னதானக் கடனுடன் விழா ஆரம்பமானது; புனிதச் சடங்குடன் தொடர்ந்து; விருந்தும் முடிந்தது.

சிவசிதம்பரம் தம்பதியும் பிள்ளைகளும் பால் காய்ச்சிக் குடித்து, விருந்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விழா முடிந்து, சிறுபொழுதாகி யிருக்கும்.

பள்ளி சென்ற கடைக்குட்டிப் பையன் ஓடோடி வந்தான். "அப்பா, அப்பா ! எங்க ஸ்கூல் திடுதிப்பென்று இடிந்து விழுந்து விட்டது. நல்லவேளை; யாருக்கும் சேதமில்லை, ஆனால், நாளைக்கு ஸ்கூல் நடத்துவதற்குத்தான் இடமில்லை!” என்று வருத்தத்துடன் தெரிவித்தான்.

பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்தும் வந்திருந்த வாழ்த்துச் செய்திகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு, சிவசிதம்பரம் கதர்த்துண்டு காற்றில் பறக்க, வேகமாக விரைந்தார். அடுத்த பதினைந்தாவது நிமிஷம் அவர் தமது புது மனைக்குத் திரும்பினார். தம் அருமைத் துணைவியிடம், நாகம்மை! புறப்படு. பிள்ளைகளையும் அழைத்துக் கொள். நமது பழைய வீடுதான் இனி நமக்குச் சதம். இந்தத் தாஷ்கண்ட வீடு தான் இனி இவ்