பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


சென்ற சொத்து இம்மாதிரி உபதேச மொழிகள் தாம். நான் போய்வருகிறேன் ...."

***

கொலு மண்டபத்தில் மெய்க்காப்பாளன் போட்டி நடந்தது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் ஆவலோடு முடிவை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக அந்த மூன்று புலிகளும் இருந்தார்கள்; கூட அந்தப் பட்டிக்காட்டு இளைஞனான மாணிக்கமும் நின்றான்!

ராஜநிருபர் வந்து, மன்னரின் ஓலையை வாசித்தார் :

"இன்று நடந்த மெய்க்காப்பாளர் பதவி பொறுப்பு நிறைந்தது ; அன்புள்ளம் ; கடமையுணர்ச்சி எல்லாம் நிறம்பப்பெறவேண்டியது. மெய்க்காப்பாளர் பதவிக்குரிய எல்லா நற்குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மாணிக்கம் என்ற யுவனுக்கே மெய்க்காப்பாளன் பதவியைக் கொடுப்பதாக மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்......!"

மாணிக்கம் ஆனந்தக் கூத்தாடினான். "மன்னர் பிரான் வாழ்க!...மன்னர் பிரான் வாழ்க...!" என்று தன்னை மறந்து வாழ்த்தினான்.

அப்போது, அவன் ஆற்றில் உதவிசெய்த கிழவன் விசையுடன் வந்தான். "தம்பி, நீ வெற்றி