பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

27. விவிலியமும் வாழ்வும்

வாழத் தெரியாதவர் திரு.வி.க. என்பர் சிலர். அவர் திரு.வி.க.வை கன்கு அறியாதவரே.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைத்து எண்ணப்படும் என்றார் பொய்யா மொழியார்.

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் திரு.வி.க. வாழ்வாங்கு வாழ்தலாவது யாது!

மாடமாளிகை கட்டி வாழ்தலா? பெரிய பெரிய கார் வைத்துக்கொண்டு சவாரி செய்தலா? பாங்கில் கிறையப் பணம் போட்டு வைத்துக்கொண்டு லேவா தேவி செய்து வட்டி வாங்குதலா? எது.

வாழ்வாங்கு வாழ்தல் இதுவே என்று கருதும் மடமை உலகம். ஆனல் மெய் வாழ்வு இஃதன்று. திருவள்ளுவர் கருத்தில்கொண்ட வாழ் வாங்கு வாழ்தல் இதுவன்று.

வாழ்வாங்கு வாழ்தல் எது என்பதைக் கிறிஸ்து பெருமான் கூறுகிறார் :

“ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, பிதுரார்ச்சிதத்தைப் பாகம் பிரித்து என்