பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

197

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற மொழியினை ஓயாது முழங்கியவர் அவர். உயிர்க்குலம் முழுவதையும் ஒன்றாகக் கருதியவர் அவர். உயிர்க் குலத்தின் நல்வாழ்வு கருதியவர். இக்கருத்தில் தோன் றியதே தம் விழுமிய கொள்கையாகிய சன்மார்க்கம்.

உலகம்,சன்மார்க்க மயமாதல் வேண்டும் வேண்டும் என்று முழங்கிய பெரியார் திரு.வி.க. உலகம் சன் மார்க்க பொதுவுடைமை மயமாதல் உறுதி. என்றாே ஒருநாள் உலகம் முழுதும் சன்மார்க்கப் பொது வுடைமை வழி இயங்கும். அங்காள் வரும்போது சன்மார்க்கப் பொதுவுடைமை பெரியார் வரிசையில் ஒருவராக விளங்குவார் திரு.வி.க. என்பது உறுதி: உறுதி உறுதி.

வாழ்க திரு.வி.க வளர்க பொதுவுடைமைச் சன்மார்க்கம்!