பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

விருத்தாசலனுர் வீட்டுத் திண்ணையே பள்ளி ஆயிற்று. விருத்தாசலனுரே மக்களுக்குப் போதித்தார். தமிழ் எழுத்துக்களை மணலில எழுதி எழுதிக் கற்பித்தார். பின்னே அரிச்சுவடி, ஆத்தி சூடி, கொன்றை வேக்தன் உலகநீதி முதலியன முறையே போதிக்கப்பட்டன.

விருத்தாசலனுருக்குச் சிறிது ஆங்கிலமும் தெரியும். மக்களுக்கு ஆங்கிலமும் கற்பித்தார்.

இங்கிலையில் மீண்டும் இராயப் டேட்டைக்கே குடி புக எண்ணினர் விருத்தாசலனுர். பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க அவர் விரும்பியதே அதற்குக் காரணம்.

இராயப்பேட்டை முத்து முதலித் தெருவிலே உள்ள தொரு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு அமர்த்தினர்.