31
31
செல்வார் கலியான சுந்தரம். தேவதாசரின் மனைவி’ யார்கலியான சுந்தரத்திடம் அன்பு காட்டி வந்தார்;
அவருக்குப் பூகோளம் போதித்தார். இங்கிலையில் தேவ
தாசர் திருவள்ளுர் பள்ளித் தலைமைஆசிரியராக
மாற்றப்பட்டார். வேறு ஒருவர் வந்தார்.
போதகாசிரியராக வருதற்குச் சிறிதும் தகுதியில் லாதவர் அவர். அவரிடம் சந்தேகம் கேட்டால் சீறுவர்.
ஒருமுறை கலியாண சுந்தரத்தின் மீது சீறினர் அந்த ஆசிரியர்.
“நீங்கள் போலீஸ் வேலைக்குத் தகுதியானவர்’ என்று பதில் கொடுத்தார் கலியான சுந்தரம். பிள்ளை கள் எல்லாரும் சிரித்தனர்.
கான்காவது பாரத்தை கண்ணியபோது அந்தப் போலீஸ் ஆசிரியரே வரக் கண்டார் கலியாணசுந்தரம்; மனம் கொதித்தார். வகுப்பினர் எல்லாரையும் சேர்த். துக் கொண்டு கிளர்ச்சி செய்தார். போலீஸ் ஆசிரியர் போனர்.
வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராக கியமிக்கப்
பட்டார் ஒருவர். அவர் பெயர் யாழ்ப்பாணம் கா. கதிரை வேற் பிள்ளை என்பது.
கதிரைவேலர் சிறந்த பேச்சாளர்; தமிழ்க்கடல். அவரது சொற்பொழிவிலே மாணவர் உலகு மயங் கிற்று. அவர் அளித்த காட்சி கலியான சுந்தரத்தின் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது.
கதிரை வேலருடன் நெருங்கிய உறவு கொண்டார் சுந்தரனர். அவரது சொற்பொழிவு எங்கு நிகழ்ந்தாலும் அங்கு ஓடினர்.