பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்வேல் பறியா நகும்

63


அவை அனைத்தும் பழம்பெருமைகள் என்று வெறுத்து ஒதுக்கிவிடக்கூடியவையல்ல பழம் பெருமைகளை எண்ணி நடப்பது புதிய வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

நாட்டின் செழிப்பை, மொழியின் வளர்ச்சியை, மக்களின் வீரத்தை உணரவும், மறைந்திருந்து தாக்கும் இன்றைய வஞ்சக மக்களை ஒழிக்கவும், பகைவர்கள் என்ன செய்தாலும் உறங்கிக் கிடக்கும் இன்றைய தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவும், இதுபோன்ற பழந் தமிழ் வீரர்களின் வரலாறு பெரிதும் துணை செய்யும் என்பது எனது எண்ணம்.

வளரட்டும் தமிழரின் வீரம்!