பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. மெய்வேல் பறியா நகும்

       "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும்."

என்பது திருக்குறளில் உள்ள ஒரு குறள். ‘தன்னைக் கொல்லவந்த யானையின்மீது கைவேலை எறிந்து போக்கிவிட்டுப் பகைவன் தன்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்’ என்பது குறளின் பொருள்.

இக்குறள் படைச்செருக்கு என்ற அதிகாரத்தில் வந்துள்ளது. படைச்செருக்கு என்பது. படையின் பெருமை, வீரரின் சிறப்பு என்று ஆகும்.

உலக மக்கள் பலரிடமும் காணப்படுகின்ற வீரத்திற்கும், தமிழகத்தில் காணப்பெறும் வீரத்திற்கும் வேறுபாடு உண்டு. தமிழகத்தின் வீரம் ஒரு தனிப்பண்பு வாய்ந்தது. இதனைத் ‘தமிழ் வீரம்’ என்றும், ‘தமிழரின் வீரம்’ என்றும் கூறுவர்.

பழங்காலத்துத் தமிழ்மக்களில் சிறந்த பெண் ஆண் ஆகிய இருபாலாரிடத்தும் காணப்பெற்ற வீரச்செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும், வள்ளுவரது குறள் இதனை இன்னும் தெளி வாக்கிக் காட்டுகிறது.