136
7. பெரியாரைத் துணைக் கோடல்.
பெரியாரைத் துணைக் கோடலாவது தம்மின் முதிர்ந்த அறி அடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற் ற பற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணை யாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.
441. அரியவற்று ளெல்லாமரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
(இ-ள்) செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தல் அரிது தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கூட்டிக்கொள்ளுதல், (எ-று).
பெரியாரென்றது மந்திரி புரோகிதரை, அவரைத் தேடிக் கூட்டுதலரிதென்றது. 1
442 உற்றநோய் நீக்கி புறா.அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
( இ-ள்) அரசர்க்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்ப முறாமல் முன்பே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக்கொள்க
(எ- று) .
மேல் பெரியாரென்று பொதுப்படக் கூறினார், இது மந்திரி யைக் கூட்டுமாறு கூறிற்று. 2
443. அறனறிந்து முத்தவறிவுடையார் கேண்மை
தி னைறிந்து தேர்ந்து கொளல்.
(இ-ள்) அறத்தின் பாடறிந்து முதிர்ந்த அறிவுடையானது
கேண்மையை அ வ ர வ ர் செய்தியாகிய திறன்களையறிந்து ஆராய்ந்து கொள்க. (வ - ) .
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. 3
444. சூழ்வார்கண் ணாக வொழுகலசன் மன்னவன்
சூழ்வாரை ச் சூழ்ந்து கொளல்.