183
22. ஊக்கமுடை ைம
இது, பொருட்கேடுவரினுந் தளரா ரென்றது. 8
599. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.
(இ-ள்) உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மை யு டையே மென்னுங் களிப்பினைப் பெறார், (எ-று).
இஃது, ஊக்க மில்லாதார்க்கு (பொருள்வரவு இல்லையாம்; ஆதலான், அவர் பிறர்க்கு)* ஈயமாட்டாரென்றது. 9
600. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (இ-ள்) யானை பரிய உடம்பினதாய்க் கூரிய கோட்டையும் உடையதாயினும், புலி பொருமாயின் அஞ்சம், (எ-று) .
இஃது ஊக்கமில்லாதார் பெரியராயினும் கெடுவர் என்றது. 10
23. மடியின் மை
மடியின்மையாவது சோம்பலின்மை. செய்யுங்க ரியம் ** . [LI T நினைத்தாலும் அதனைச் செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது.
601. மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர்.
(இ-ள்) மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுவார். (எ-று).
இது, மடியாமை வேண்டுமென்றது. 1
602. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.
இருதலைப் பகிரத்துள்ளது மணக்குடவருரை யிற் கண்டது.