பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



  (4)மறை துதிக்கும் பதம்(71,72) 


மறைதுதிப்பது; மறைச்சிலம்பு ஒளிர்வது; மறையே பாதுகை யாக விளங்குவது; (71): ."

மறைகளின் முடிமணியாக விளங்குவது; மறைகளுக்கு எட்டாதது; மறைகள் நான்கையும் குதிரைகளாகக் கொண்டது(72).


  (5)பிரமன் பரவும் பதம்(73-76)


  மறையவன் உள்ளத்திற் பரவுவது; கோடிக்கணக்கான மறையவர் சிரமேற் கொண்டு வணங்குவது (73) 
  பிரமன் 'சிரசிகாமணி' என்று புகழ்ந்து பரவுவது (74);
  பிரமனுக்கு உலகத்தைப் படைக்கும் அதிகாரம் அருளியது (75);
  பிரமன் கனவினும் காணாதது; பிரமன் பரவுவது (76);


  (6)மால் வணங்கும் பதம்(77-82)


  திருமாலாகிய இடபத்தை ஊர்வது; நெடுமால் அருச்சிப்பது(77);
   மால்பரவி நாடொறும் வணங்குவது; தாமரை போன்ற தன்

கண்ணை மலராக இட்டு வணங்கியது (78);

   மால் பன்றியுருக்கொண்டு தேடியது; பலகோடி திருமாலின் தசை நீங்கிய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்தது (79); 
    திருமால் முடிமீது அணியாக விளங்குவது; திருமால் உள்ளத் தில் எழுந்தருள்வது; மாலும் அறிவதற்கு அரிதாகியது (80).
    திருமால் எடுத்த பத்து அவதாரங்களிலும் வழிபட்ட பெருமையுடையது (81); -
    திருமால் உலகத்தைக் காக்கும் தொழில் பெற்றுப் பணிவாக இருத்தற்கு அருள் புரிந்தது (82). 


      (7) உருத்திரன் முதலானோர் 
       ஏத்தும் பதம் (83-90)
   கயிலையில் பத்தியாய்ச் சிவப்பணி புரியும் உருத்திரர்கள் புகழ்ந்து பரவுவது; வயஉருத்திரர்கள் சூழ்ந்து துதிப்பது (33)
   உருத்திரர்கள் படைத்தளித்தழிக்கும் முத்தொழிலையும் செய்தற்கு அருள் செய்வது (84)