பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலை வெளியிட்டருளும் பனசைம் புலவர் பெருந்தகை, இயல் இசைமாமணி, டாக்டர் M. V. J. MA., D.Lit., அவர்களுக்கு மணமக்கள் சார்பிலும், மணமகளின் பெற்றோர் சார்பிலும், என் சார்பிலும், என் மக்கள் சார்பிலும் நன்றியறிதலை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதேன் என்ன மதுரிக்கும்” சிவபரம்பொருளின் “இன்பு உதவுகின்ற” திருவடியை வந்தித்து வாழ்த்துகிறேன்.

இப்பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்தருள்
என் அப்பா நின் தாட்கே அடைக்கலம்காண்-இப்பாரில்
நானினது தாணீழல் நண்ணுமட்டும் நின்னடியர்
பால்நினது சீர்கேட்கப் பண்.

—சிவநேச வெண்பா (102)


திருப்பனந்தாள் இங்ஙனம்

2-9-1990  கே. எம். வேங்கடராமையா