பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஉ క్షీ బే; శT (இ-ஸ்.) தன்சீர்வகையினும் எ-து ஆசிரியவுரிச்சீரின் கூற்றானும். தளைநிலை வகையினும் எது அச்சீரானாய தளைநிலைக் கூற்றானும், இன் . ... முரிய எ-து இன்சீர்ப்பகுதியோடே அவ்வாசிரியம் முற்கூறிய ஐவகையடியான் வந்து பதினேழ் நிலத்தி னிகந்து வாரா. எ-று. தன்சீரென்னாது வகையென்றது முன்னிரையிற்ற விரண்டினையுந் தளை கொள்ளுமென்றற்கும், ஏனை நான்குரிச்சீருந் தளைகொள்ளா வென்றற்கும். தளைநிலைவகையென்றது, உரிச்சீராற் றளைவருங்கால் ஒரடியின் இரண்டுவரின் ஒசையுண்ணா. தென்றற்கு இன்சீர்வகையின் என்றது, ஆசிரியவுரிச்சீர் நான்கு நிரலே நின்றுழித் துரங்கலோசை பிறத்தலின் இயற்சீர்கள் ஒன்றிடையிட்டு வரவேண்டும் சீர்வகைக்கென்பது உம், அதற்கும் இன்னோசை மிகவுமின்றென்பது.ாஉம், முன்னிரையீற்ற விரண்டும் இடையில் வாராது அடிமுதற்கண்ணே வந்து இயற்சீரோடு தட்டு இன்னோசைத்தாமென்பது உம், அசை1 யோரடிக்கிரண்டுவந்து தட்டாலும் இன்னோசைத்தாமென்பது உம் அறிவித்தற்கு. உ-ம். ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி நிவந்துதோன்று களிற்றி னிலங்குகோடு புரைய’ இவை இயற்சிரொன்றிடையிட்டு உரிச்சீரான் வந்தன. 'பாம்புமணி யுமிழும் பானா ளிங்குவரல்’ இஃது இரண்டிடையிட்டது. "ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளிஇ (புறம்-ருரு) "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை' (புறம்- ங்) இவை தளை நிலைவகையான் வருதலாற் கட்டளையாய் இன்னோசை பெற்றன. இனி, ஐந்தெழுத்துமுதலாத் தன்சீர்வகை வருதலும், தளை. வகை யேழெழுத்து முதலாக வருதலும் உரையிற்கொள்க. அவை: "ஓங்குகோட்டு மீது பாய்ந்து பாய்ந்து முசுக்கலை யாடு நாடற் குரைப்பதை யெவன்கொனந் தோளே தோழி' 1. அவை எனத் திருத்திக் கொள்க. அவை என்றது முற்கூறிய முன்னிரையிற்ற நேர்புநிாை. கிாைபுநிரை என்னும் ஆசிரியவுரிச் சீர்கள் இரண்டினையும்.